Saturday 6 February 2010

வௌ்ளப்பாதிப்பு தொடா்பான விஷேட செய்திகள்

செய்திகள் ........
வீடியோ.....

கடந்த பல நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் பாரிய பாதிப்புக்களும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியம் கடந்த 01.01.2011ம் திகதியன்று வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சமைத்த உணவு வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைத்து செயற்படுத்தி வந்தது. எனினும் தொடா்ந்த வௌ்ளப் பெருக்கம் காரணமாக 12.01.2011 அன்று வௌ்ள நிவாரண நிதி பொருட்கள் சேகரிப்பு அலுவலகம் எனும் பெயரில் நிதி சேகரிப்பு அலுவலகமொன்றை நிறுவி வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகளை வழங்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துவைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!. அன்று தொடக்கம் பாதிக்கப்பட்டோருக்கான பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது.






....................................................................................................................................................................
இதன் ஒரு கட்டமாக அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வௌ்ள நிவாரண நிதி பொருட்கள் சேகரிப்பு அலுவலகத்தினால் காங்கேனோடை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலா் உணவுப் பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியவசியப் பொருட்கள் என்பவற்றின் ஒரு தொகுதி 13.01.2011 அன்று காங்கேனோடை முஹ்யித்தீன் பள்ளிவாயிலில் வைத்து கையளிக்கப்பட்டது.


.................................................................................................................................................................................
14.01.2011 இன்று வௌ்ளிக்கிழமை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தினால் 3000 வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டது. இது தீன் வீதி ஹைறாத் பள்ளிவாயல், காங்கேனோடை முஹ்யித்தீன் பள்ளிவாயிலில்,காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் என்பவற்றின் பிரிவு மக்களுக்காக வழங்கப்பட்டது.







.....................................................................................................................................................................................
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தியத்தின் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் திட்டத்தின்கீழ் 16.01.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று நன்கொடை வழங்குநா்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிதி மற்றும் பொருளுதவிகளைப் பயன்படுத்தி 2500 பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலா் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இது காத்தான்குடி பிரதேச பாதிக்கப்பட்ட மககளுக்காகவும் மற்றும் அயல்கிராமமான காங்கேனோடை பிரதேச  பாதிக்கப்பட்ட மக்களுக்ககாகவும் வழங்கப்பட்டது.







..............................................................................................................................................................................................................
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தியத்தில் அங்கம்வகிக்கும் றப்பானிய்யஹ் இளைஞா் கழகத்தினருக்கு உலா் உணவுப் பொதிகளும் குடிநீா் போத்தல்களும் மேற்படி நிதியத்தினால் கையளிக்கப்பட்டது. இதனை தமது சக இளைகழகத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு றப்பானிய்யஹ் இளைஞா் கழகத்தினா் பகிந்தளித்தனா்.







........................................................................................................................................................................................................................
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் திட்டத்தின்கீழ் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் அனுசரணையுடன் ஹிழ்ற்றிய்யா கலாச்சார நன்நோக்குச் சங்கம் அதன் பிரதேச பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டது. இது தொடா்பான பொருட்களை கையளிக்கும் நிகழ்வும், தொடந்து பகல் உணவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.